தமிழுக்குக்கதி

கம்பரும் வள்ளுவனும் தமிழுக்கு வித்திட்ட இரு பெருங்கவி.

Thursday, August 19, 2010

செம்மொழி மாநாட்டில் ..... சீனி னைநா முகமது

செம்மொழி மாநாட்டில் மலேசியாவிலிருந்து கலந்துகொண்டவர்களில் உங்கள் குரல் இதழாசிரியரும் பாவலருமாகிய கவிஞர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.


"தமிழ்ச் சொற்புணர்ச்சிக் கோட்பாடுகளும் புதிய விதிகளும்" எனும் தலைப்பில் கவிஞர் ஐயா மாநாட்டில் தம்முடைய கட்டுரையைப் படைத்தார். அதன் நிகழ்படம் (Video) கீழே தரப்பட்டுள்ளது. கண்டு மகிழ்க!


பகுதி 1:- (3.38ஆவது நிமயத்தில் கவிஞரின் உரை தொடங்குகிறது)

பகுதி 2:-

பகுதி 3:-


பகுதி 4:-




செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு, 06.07.2010 அன்று மாலை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள் என்ற தலைப்பில் கவிஞர் சீனி நைனா முகமது, பிரான்சு பெஞ்சமின் லெபோ, சிங்கப்பூர் அமலதாசன், மலேசியா ஐ.இளவழகு ஆகியோர் உரையாற்றினார்கள். மறைமலை இலக்குவனார் தலைமை தாங்கினார்.


கவிஞர் சீனி ஐயா, தொல்காப்பிய எடுத்துக்காட்டுகளுடன் பேசினார். அவன் வந்தான் என்பதை ஆங்கிலத்தில் He came என்பர்; மலாயில் வேறு மாதிரி கூறுவர். இதில் அவன் என்பதை எடுத்துவிட்டால், வந்தான் எனத் தமிழில் எஞ்சும்; ஆங்கிலத்தில் came என்பது எஞ்சும். தமிழில் உள்ள சொல்லில் உயர்திணை, இறந்த காலம், ஆண்பால், திணை ஆகியவை வெளிப்படுகின்றன. ஆங்கிலத்தில் இறந்த காலம் என்ற ஒன்று மட்டுமே வெளிப்படுகிறது.


தமிழில் வெட்டு என்பது வினைச் சொல்; அந்தச் செயலைச் செய்யும் கருவிக்கு வெட்டி (மண் வெட்டி) என்று பெயர்; இது போல் ஆங்கிலத்தில் cut என்ற வினையைச் செய்யும் கருவிக்கு cutter என்று பெயர்; அதே நேரம் heat என்ற என்ற வினையை ஆற்றும் கருவிக்கு heater என்று பெயர். Cut உடன் er சேரும்போது, T இரட்டிக்கிறது; ஆனால், heat உடன் er சேரும்போது இரட்டிக்கவில்லை. இது ஏன் எனப் பலரையும் கேட்டேன். விளக்கம் கிட்டவில்லை. ஆங்கிலத்தில் இதற்கான இலக்கணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. ஆனால், தொல்காப்பியத்தில் இதற்கு விளக்கம் இருக்கிறது.


முதற்சொல் குறிலாக இருக்கையில், வரும் சொல் உயிரானால், முதற்சொல்லின் ஈற்றெழுத்து இரட்டிக்கிறது. ஆனால் நெடிலாக இருந்தால் இரட்டிப்பதில்லை. கல் என்ற சொல்லுடன் அடி என்ற சொல் இணைந்தால், கல்லடி என்ற சொல்லில் 'ல்' என்ற எழுத்து இரட்டிக்கிறது. ஆனால், கால் என்பதுடன் அடி இணைந்தால், காலடி என ஆகிறது. இங்கு இரட்டிப்பதில்லை. இதற்கான இலக்கணத்தைத் தெளிவாக வரையறுத்துள்ளது, தமிழின் செம்மையைக் காட்டுகிறது என எடுத்துரைத்தார்.


செம்மொழி மாநாடு வெற்றிகரமாக நடந்தாலும் இங்கே அறிவுபூர்வமாகத் தமிழை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்‘ என ஒருவர் பாடினால், அதை என்ன செலவானாலும் திருத்திவிட்டுத்தான் மறுவேலை என்ற துடிப்பு எவரிடமும் எழவில்லையே. அப்புறம் என்ன செம்மொழி? எனக் கண்டித்தார். ‘அசத்தப் போவது யாரு?’ என்ற தலைப்பினை விமர்சித்த அவர், அசத்தப் போவது நாயா, பன்னியா? மனிதன் தானே? அசத்தப் போகிறவர் யார்? என எழுத வேண்டியது தானே எனக் கேட்டார்.


தமிழகப் பத்திரிகைகளையும் வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் பார்த்து, மலேசிய ஊடகங்களும் இப்போது கெட்டுவிட்டன. தமிழகத்திலிருந்து வரும் இவற்றை மலேசியாவில் தடை செய்தால் நன்றாய் இருக்கும் எனக் கூறினார்.
  • நன்றி:- ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செய்தி [வல்லமை மின்னிதழ்]
செம்மொழி மாநாட்டில் மலேசியாவிலிருந்து கலந்துகொண்டவர்களில் உங்கள் குரல் இதழாசிரியரும் பாவலருமாகிய கவிஞர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.


"தமிழ்ச் சொற்புணர்ச்சிக் கோட்பாடுகளும் புதிய விதிகளும்" எனும் தலைப்பில் கவிஞர் ஐயா மாநாட்டில் தம்முடைய கட்டுரையைப் படைத்தார். அதன் நிகழ்படம் (Video) கீழே தரப்பட்டுள்ளது. கண்டு மகிழ்க!


பகுதி 1:- (3.38ஆவது நிமயத்தில் கவிஞரின் உரை தொடங்குகிறது)

பகுதி 2:-

பகுதி 3:-


பகுதி 4:-




செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு, 06.07.2010 அன்று மாலை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள் என்ற தலைப்பில் கவிஞர் சீனி நைனா முகமது, பிரான்சு பெஞ்சமின் லெபோ, சிங்கப்பூர் அமலதாசன், மலேசியா ஐ.இளவழகு ஆகியோர் உரையாற்றினார்கள். மறைமலை இலக்குவனார் தலைமை தாங்கினார்.


கவிஞர் சீனி ஐயா, தொல்காப்பிய எடுத்துக்காட்டுகளுடன் பேசினார். அவன் வந்தான் என்பதை ஆங்கிலத்தில் He came என்பர்; மலாயில் வேறு மாதிரி கூறுவர். இதில் அவன் என்பதை எடுத்துவிட்டால், வந்தான் எனத் தமிழில் எஞ்சும்; ஆங்கிலத்தில் came என்பது எஞ்சும். தமிழில் உள்ள சொல்லில் உயர்திணை, இறந்த காலம், ஆண்பால், திணை ஆகியவை வெளிப்படுகின்றன. ஆங்கிலத்தில் இறந்த காலம் என்ற ஒன்று மட்டுமே வெளிப்படுகிறது.


தமிழில் வெட்டு என்பது வினைச் சொல்; அந்தச் செயலைச் செய்யும் கருவிக்கு வெட்டி (மண் வெட்டி) என்று பெயர்; இது போல் ஆங்கிலத்தில் cut என்ற வினையைச் செய்யும் கருவிக்கு cutter என்று பெயர்; அதே நேரம் heat என்ற என்ற வினையை ஆற்றும் கருவிக்கு heater என்று பெயர். Cut உடன் er சேரும்போது, T இரட்டிக்கிறது; ஆனால், heat உடன் er சேரும்போது இரட்டிக்கவில்லை. இது ஏன் எனப் பலரையும் கேட்டேன். விளக்கம் கிட்டவில்லை. ஆங்கிலத்தில் இதற்கான இலக்கணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. ஆனால், தொல்காப்பியத்தில் இதற்கு விளக்கம் இருக்கிறது.


முதற்சொல் குறிலாக இருக்கையில், வரும் சொல் உயிரானால், முதற்சொல்லின் ஈற்றெழுத்து இரட்டிக்கிறது. ஆனால் நெடிலாக இருந்தால் இரட்டிப்பதில்லை. கல் என்ற சொல்லுடன் அடி என்ற சொல் இணைந்தால், கல்லடி என்ற சொல்லில் 'ல்' என்ற எழுத்து இரட்டிக்கிறது. ஆனால், கால் என்பதுடன் அடி இணைந்தால், காலடி என ஆகிறது. இங்கு இரட்டிப்பதில்லை. இதற்கான இலக்கணத்தைத் தெளிவாக வரையறுத்துள்ளது, தமிழின் செம்மையைக் காட்டுகிறது என எடுத்துரைத்தார்.


செம்மொழி மாநாடு வெற்றிகரமாக நடந்தாலும் இங்கே அறிவுபூர்வமாகத் தமிழை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்‘ என ஒருவர் பாடினால், அதை என்ன செலவானாலும் திருத்திவிட்டுத்தான் மறுவேலை என்ற துடிப்பு எவரிடமும் எழவில்லையே. அப்புறம் என்ன செம்மொழி? எனக் கண்டித்தார். ‘அசத்தப் போவது யாரு?’ என்ற தலைப்பினை விமர்சித்த அவர், அசத்தப் போவது நாயா, பன்னியா? மனிதன் தானே? அசத்தப் போகிறவர் யார்? என எழுத வேண்டியது தானே எனக் கேட்டார்.


தமிழகப் பத்திரிகைகளையும் வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் பார்த்து, மலேசிய ஊடகங்களும் இப்போது கெட்டுவிட்டன. தமிழகத்திலிருந்து வரும் இவற்றை மலேசியாவில் தடை செய்தால் நன்றாய் இருக்கும் எனக் கூறினார்.
  • நன்றி:- ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செய்தி [வல்லமை மின்னிதழ்]

Tuesday, August 17, 2010

தாசன் கண்ட தமிழ்

இன்பத் தமிழ் அமுது

தமிழ்க்கூறு நல்லுல்கில் தமிழ்மக்களால் புரட்சிக்கவி என்றழைக்கப்படும் பாரதிதாசனால் இன்தமிழ், 'இன்பத் தமிழ்' எனும் கவிதை இயற்றப்பட்டது. தமிழைப்பற்றி இவர் வடித்த கவிதைகளில் இஃது மிகவும் பிரபலமாவதற்கு ஊடகம் முக்கியப்பங்காற்றியுள்ளது என்றால் மிகையாகாது. அவர் இயற்றிய அக்கவிதையின் விளக்கத்தைக் காண்போமா?

அமுதம் இனிமை மிக்கது; உண்டவரை நெடு நாள் சிறப்புற்று வாழ வைக்கும் தன்மையை உடையது. தமிழும் கற்பவருக்கு அத்தகைய நன்மைகளைப் பயக்கும் என்பதால் அமுது என அழைக்கப்படுகிறது. இனிமை மிக்க தமிழ், அம்மொழியைப் பேசும் தமிழர்களுக்கு உயிருக்குச் சமமானதாகும். நிலவின் குளிர்ச்சியான ஒளி உடலுக்கு இதமளிப்பதைப் போன்று, கற்போரின் உள்ளத்திற்குத் தமிழ் இதமாக இருப்பதால், அத்தமிழ் நிலவென அழைக்கப்படுகிறது.

இனிமை மிக்க தமிழ்,சமுதாயம் எனும் பயிர் விளைவதற்கு ( முன்னேற்றத்திற்கு ) நீர் போன்றதாகும். தமிழ்மணம் எனவும் அழைக்கப்படுகிறது. அதுவே தமிழர்களின் வாழ்வை உறுதி செய்யத்தக்க ஊருக்குச் சமமாகும். தமிழைக் கற்போர் அதன் ஆற்றலால் சொக்கி, இன்ப மயக்கம் அடைவதால், அத்தமிழை மது என அழைக்கிறோம். இன்பம் தரும் தமிழ் எங்களுடைய உரிமை எனும் செழிப்பான பயிருக்கு வேர் போன்று அவசியம் மிக்க ஒன்றாக விளங்குகிறது.

தமிழ், எங்கள் சமுதாயம் என்றும் இளமை குன்றாது துடிப்போடு செயல்பட ஆற்றலை வழங்கும் பாலுக்குச் சமமானது. இனிமை மிக்க தமிழ் சிறப்புற்று விளங்கும் புலவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் ஆயுதமாக விளங்குகிறது. வானத்திற்கு எல்லை இல்லை. அது போல எல்லை இல்லா அளவிற்கு நாங்கள் முன்னேற்றமடைய தமிழ் அடிப்படையாக விளங்குகிறது. இனிமை மிக்க தமிழ் எங்கள் சோர்வைப் போக்கி புதுத்தெம்பை அளித்திடும் தேன் போன்றதாகும். தமிழராகப் பிறந்த எங்களுக்குத் தமிழ், தாயாக விளங்குகிறது. இன்பத்தமிழ் செம்மை மிக்க எங்கள் மனங்களின் ஆற்றல் மிக்க சக்தியாக விளங்குகிறது.

இவ்வாறு வரிக்கு வரி தமிழ்ச்சுவையைத் தெளித்துள்ளார் புரட்சிக்கவி பாரதிதாசன். இதோ அந்த அமுத வரிகள்....

தமிழுக்கும் அமுதென்றுபேர் ! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்குநேர் !
தமிழுக்கு நிலவென்றுபேர் ! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்குநீர் !
தமிழுக்கு மணமென்றுபேர் ! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்தஊர் !
தமிழுக்கு மதுவென்றுபேர் ! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்குவேர் !
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் ! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்குவேல் !
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் ! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்ததேன் !
தமிழ் எங்கள் பிறவிக்குத்தாய் ! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

- பாரதிதாசன்.

ஒரே மலேசியா